வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான அகல்விளக்கு கண்டுபிடிப்பு – தோண்டத்தோண்ட பல அரிய பொக்கிஷங்கள்!
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் கடந்த மார்ச் 16-ம் தேதி தொல்லியல் கள ஆய்வுப் பணியினை தமிழகத் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கிவைத்தார். தொல்லியல்மேடு களத்தில் அகழாய்வுப் பணிக்காக 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுக் குழி தோண்டும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. தொல்லியல் ஆய்வுக் களத்தில் 75 செ.மீ. ஆழத்தில் பலவண்ணப் பாசிகள், சுடுமண்ணாலான வட்டச்சில்லுகள், சங்கு வளையல்கள், சங்கு அறுக்கப் பயன்படும் கருவிகள் கிடைத்தன. தற்போது இரண்டு குழிகளும் 1 மீட்டர் ஆழத்தைக் கடந்து…