தென்காசி: தண்டவாளத்தில் விபத்து; தைரியமாக டார்ச்லைட் அடித்து ரயிலை நிறுத்திய வயதான தம்பதியர்!
தமிழ்நாடு – கேரளா எல்லையில் லாரி ஒன்று விபத்துக்குள்ளாகி ரயில்வே தண்டவாளத்தில் விழுந்தது. அந்தச் சமயம் அந்த வழியாக கேரளா நோக்கி வந்த ரயிலை வயது ஒரு முதிர்ந்த தம்பதியினர் டார்ச் லைட் மூலம் சிக்னல் காண்பித்து நடுவழியில் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்தப் பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “கேரளாவில் இருந்து பிளைவுட்டுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று புளியரை, செங்கோட்டை வழியாகத் தமிழகத்தின் தூத்துக்குடி நோக்கி வந்து…