கிராமத்திலிருந்து புயலாய் கிளம்பியவனின் கோப்பை கனவு! மைதானத்திலேயே கண்கலங்கிய உனாத்கட்!
15 வருடங்களில் இரண்டாவது முறையாக விஜய் ஹசாரே கோப்பையை வென்றுள்ளது உனாத்கட் தலைமையிலான சவுராஸ்டிரா அணி. இந்திய அணியிலிருந்து வெளியேற்றம், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேற்றம் என்பதையெல்லாம் கடந்து, தன்னுடைய சவுராஸ்டிரா அணிக்கு 14 வருடங்களுக்கான கோப்பை கனவை நிஜமாக்கி கொடுத்திருக்கிறார் இந்திய அணியின் வீரர் ஜெயதேவ் உனாத்கட். இந்திய அணியில் வெறும் 18 போட்டிகள் மட்டும் தான்! 2010ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நெட் பவுலராக தேர்ந்தெடுக்கப்பட்டார் உனாத்கட். அதற்கு பிறகு…