விருத்தாசலம்: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 5 வயது சிறுமி! – திமுக கவுன்சிலர் சிக்கியது எப்படி?
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகரத்துக்குட்பட்ட புதுப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி, அதே பகுதியிலிருக்கும் பிரைமரி, நர்சரி பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துவந்தார். கடந்த 11-ம் தேதியன்று வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற சிறுமி, மாலை வீட்டுக்கு வரும்போது தொடர்ச்சியாக அழுதுகொண்டிருந்தார். அதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், என்னவென்று கேட்டபோது, பிறப்புறுப்பைக் காட்டி `வலிக்கிறது…’ என்று அழுது துடித்திருக்கிறார். பிறப்புறுப்பில் ரத்தம் வந்துகொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்துபோன பெற்றோர், உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஆனால் `சிறுமிக்குப்…