“நான்கு போட்டிகளில் கூட ஆட முடியாதா?”- காயமடைந்த தீபக் சஹாரைக் கடுமையாக விமர்சித்த ரவி சாஸ்திரி!
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி கடந்த ஏப்ரல் 8-ம் தேதி நடைபெற்றிருந்தது. அந்தப் போட்டியில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சஹார் ஒரு ஓவர் கூட முழுவதுமாக வீசமுடியாமல் காயமடைந்திருந்தார். வேகப்பந்துவீச்சாளரான அவர், கடந்த ஐ.பி.எல் சீசனுக்கு முன்பு நடத்தப்பட்ட ஐ.பி.எல் ஏலத்தில் 14 கோடி ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணியால் எடுக்கப்பட்டார். ஆனால் அவருக்குக் காயம் ஏற்பட்டதால் அந்த சீசன் முழுவதும் அவர் விளையாடவில்லை. தீபக் சஹார்…