கோர்ட்டில் டிப் டாப்பாக உலா வந்த `போலி’ வக்கீல்; நம்பி ஃபீஸ் கட்டி ஏமாந்த பெண்! – என்ன நடந்தது?
தேனி மாவட்டம், அரண்மனைபுதூரைச் சேர்ந்தவர் துர்க்கை அம்மாள். இவர் தன்னுடைய தந்தை பாண்டியன், பூர்வீக சொத்தை மகன், மகள்களுக்குத் தெரியாமல் வேறொரு நபருக்கு விற்பனை செய்தது தொடர்பாக தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலுள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவெடுத்திருக்கிறார். இதையடுத்து அவர் நீதிமன்றம் சென்றபோது அங்கிருந்த சக்திவேல் என்பவரிடம், `சொத்து தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு போட வேண்டும், யாரைப் பார்ப்பது’ எனக் கேட்டிருக்கிறார். தேனி நீதிமன்றம் வெள்ளை சட்டை, கருப்பு பேன்ட் அணிந்து வழக்கறிஞர் போல் இருந்த அவர், “நானும் வழக்கறிஞர்தான்….