வலைப்பயிற்சியின் போது மூச்சுத்திணறல்! 28 வயதில் வேகப்பந்துவீச்சாளர் மரணம்!
ரஞ்சிக்கோப்பை போட்டியின் வலைப்பயிற்சியின் போது 28 வயதான வேகப்பந்துவீச்சாளருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஞ்சிக்கோப்பையில் பங்குபெற்று விளையாடிவந்த இமாச்சல பிரதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் சர்மா, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, இரங்கல் பதிவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் உனா நகரைச் சேர்ந்த…