சென்னை: பொங்கல் பண்டிகை போக்குவரத்திற்காக இன்று 4043 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல கடைசி நாளான இன்று, 4043 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு பொதுமக்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக, 3ஆவது நாளாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம், மாதாவரம், கே. கே நகர் என 5 மையங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் வசதிக்காக மொத்தம் 12 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில்…