`நாங்கள் சொல்லும் விலைக்கு தான் என்.எல்.சி எங்க நிலத்தை வாங்க வேண்டும்”- கடலூர் விவசாயிகள்
“என்.எல்.சி க்கு நிலம் கொடுப்பவர்களுக்கு ஒரே மாதிரியான இழப்பீடு வழங்க வேண்டும்” எனக் கோரி, கடலூரில் 7 கிராம விவசாயிகள் ஒருங்கிணைந்து `குறை தீர்க்கும் கூட்டத்தில்’ மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் அளித்துள்ளனர். என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக கடலூரில் சில இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. கடலூரில் கடந்த 1957 ம் ஆண்டு முதல், பழுப்பு நிலக்கரியில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக கொஞ்சம் கொஞ்சமாக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகின்றனர். அங்கெல்லாம் இருந்து கிராம மக்களும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்….