லக்னோ பந்து வீச்சை துவம்சம் செய்த சென்னை பேட்ஸ்மேன்கள்: 210 ரன்கள் குவிப்பு
நடப்பு ஐபிஎல் சீசனின் 7-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸை இழந்து முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 210 ரன்களை குவித்தது. அந்த அணிக்காக ருதுராஜ் மற்றும் உத்தப்பா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ருதுராஜ் மூன்றாவது ஓவரில் 1 ரன் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து களத்திற்கு வந்த மொயின் அலியுடன் மெர்சலான கூட்டணி அமைத்தார் உத்தப்பா. இருவரும்…