டெல்லியில் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்கும் பணியில் 30 தீயணைப்பு வாகனங்கள்
டெல்லி லாஜ்பத் நகரில் உள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து டெல்லியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பி வருகிறது. இந்நிலையில், லாஜ்பத் நகரில் உள்ள ஜவுளிக் கடையில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. துணிகளில் பற்றிய தீ கொளுந்து விட்டு எரிந்ததில், அருகில் இருந்த பிற கடைகளுக்கும் மளமளவென பரவியது. தகவல் அறிந்து 30 வாகனங்களில்…