குடியாத்தம்: வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்ட 2 குழந்தைகள்! – தாயின் கடைசி நிமிட துயரம்
வேலூர் மாவட்டத்தில், கொட்டித்தீர்த்த கனமழைக்குப் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணையும் நிரம்பியதால், அதிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் கௌண்டன்ய மகாநதி ஆற்றில் கரைபுரண்டுப் பாய்கிறது. குடியாத்தம் நகரின் மையப்பகுதியின் வழியாக கௌண்டன்ய ஆறு செல்வதால், பெருவெள்ளத்தை காண பொதுமக்கள் திரண்டுவருகிறார்கள். காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் பொதுமக்கள் அச்சமின்றி ஆற்றுப்படுகையை எட்டிப்பார்க்கிறார்கள். இப்படி எச்சரிக்கையையும் மீறி பெருவெள்ளத்தை வேடிக்கைப் பார்க்கச்சென்ற இரண்டு பெண் குழந்தைகளும், அவர்களது தாயும்…