குடும்பத்தைக் காப்பாற்ற காய்கறி விற்ற ஏழைப் பெண் – இருசக்கர வாகனம் பரிசளித்த காவல்துறை
இளம் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பெரிய பைகளுடன் கூடையில் காய்கறிகளை வைத்து கொண்டு நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக மாறியுள்ளது. அஸ்ஸாம் மாநிலம் திப்ருகர்ஹ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான்மோனி கோகோயி என்ற இளம் பெண். இவருக்கு 20 வயதாகிறது. 12 ஆம் வகுப்பு வரை படித்த பிறகு, ஜான்மோனி சந்தையில் காய்கறிகளை விற்று வரும் அவரது தாய்க்கு உதவி வருகிறார். இவர் அவரது பெற்றோரின் ஒரே குழந்தை. ஊரடங்குப் போடப்பட்டதால் சந்தையை மூடவேண்டிய…