மனநிலை பாதிக்கப்பட்ட மகனுடன் 65 நாள்களாகச் சாலையில் தவிக்கும் பெற்றோர் – ஊரடங்கு கொடுமை
மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞரோடு பேருந்து நிழற்குடையில் கடந்த 65 நாள்களாகத் தங்கியிருக்கும் தம்பதியினரின் நிலை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (80). இவரது மனைவி தேன்மொழி. இவர்களுக்கு பாலாஜி என்ற ஒரு மகன் உள்ளார். 80 வயதான செல்வராஜ் கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2008 ஆம் ஆண்டு சாப்ட்வேர் இன்ஜினியரிங் படித்துக்கொண்டிருந்த பாலாஜிக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து பாலாஜியின் பெற்றோர்கள் சிகிச்சைக்காக அவரை பல ஊர்களுக்கு…