`காற்றில் வேகமாக பரவுகிறது’ – உருமாறிய புதிய வகை கொரோனாவால் நிம்மதி இழந்த வியட்நாம்!
கொரோனாவை எதிர்த்து முழுமையாக வெற்றிகண்ட வியட்நாமில் உருமாறிய புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதும், அது வேகமாக பரவி வருவதும் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவிய சீனாவுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ள நாடு என்றால் அது வியட்நாம்தான். 9.7 கோடி மக்கள்தொகை கொண்ட வியட்நாமில் இந்த தொடக்கத்தின்போது கொரோனா தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை 270 மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா பரவலைச் சமாளிக்க முடியாமல் அமெரிக்கா…