எலிசபெத் மறைந்துவிட்டார்! இனி கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்தை அணியப்போவது யார்..?
பிரிட்டன் ராணி எலிசபெத் மறைந்த நிலையில் கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்தை அடுத்து அணியப்போவது யார் என்ற கேள்விக்கான விடையை இத்தொகுப்பில் பார்க்கலாம். ராணி எலிசபெத் என்றாலே இந்தியாவிலிருந்து கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படும் கோஹினூர் வைரமும் நினைவுக்கு வரும். இங்கிலாந்து ராணிஅணியும் பிளாட்டின கிரீடத்தின் மையப்பகுதியில் பதிக்கப்பட்டிருக்கும் கோஹினூர் வைரம் 105.6 காரட் எடையுடையது. உலகின் உயரிய வகை வைரமான இதன் மதிப்பு அளவிட முடியாதது. 14 நூற்றாண்டைச் சேர்ந்த கோஹினூர் வைரம் ஆந்திராவின் குண்டூர் பகுதியில் காக்கத்திய அரச…