“ஆந்திராவில் ஜெகன் அரசு எப்படி கொரோனாவைக் கட்டுப்படுத்துகிறது?” – எம்.எல்.ஏ. ரோஜா பதில்
இந்தியாவின் பல மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு வேகமாகப் பரவிவரும் நிலையில், ஆந்திர மாநிலத்தில் அந்த நோயின் பரவல் கட்டுக்குள் இருக்கிறது. அங்கு இதுவரை 21 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகளும் இதுவரை ஏற்படவில்லை. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதைத் தடுக்கவும், வீட்டிலேயே முடங்கியிருக்கும் மக்களுக்கும், கொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் உதவுவதற்கு அம்மாநிலத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட லட்சக்கணக்கான தன்னார்வ தொண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ரோஜா இந்த நிலையில் நடிகையும் ஆந்திர…