மதுரை: மூலிகைக் காற்று, மிதமான குளிர், மலைப்பழங்கள்… சித்தர்கள் உலவிய சிறுமலைக்கு ஒரு விசிட்!
வெய்யில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குளிர்ச்சியை தழுவவும், அழகிய இடங்களை கண்ணுக்கு விருந்தாக்கவும், இயற்கை கெடாத சூழலை அனுபவிக்கவும் தொலை தூர இடங்களுக்கு செல்லவே விரும்புவோம். அதே நேரம், நமக்கு அருகில் இருக்கும் இயற்கை கெடாத அற்புதமான இடங்களை ரசிக்க மறந்து விடுவோம்… வெளியூர் மனிதர்கள் அதைத் தேடி வரும்போதுதான் அதன் மதிப்பே நமக்குத் தெரியும். அப்படியொரு அருமையான சுற்றுலாத்தலம்தான் சிறுமலை. சிறுமலை என்றதும் உங்களுக்கு மலைவாழைப்பழம் ஞாபகம் வந்திருக்கும். உலகம் முழுவதும் பிரபலமான இந்த…