ஜூலை 9-ம் தேதியன்று, சர்வதேச ஜாவா தினத்தை முன்னிட்டு திருச்சியிலிருந்து திருவையாறு வரை ஜாவா பைக் ரைடு நடத்தப்பட்டது. இதில் திண்டுக்கல் எலைட் மோட்டார்ஸ், திருச்சி எம்ஜி மோட்டார்ஸ் மற்றும் ராக்ஃபோர்ட் ரைடர்ஸைச் சேர்ந்த ஜாவா பைக் ரைடர்கள் கலந்து கொண்டனர். திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஜாவா பைக் ஷோரூமில் இருந்து இந்த ரைடு தொடங்கியது. பிறகு, தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலுக்குச் சென்றனர். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு திருவையாறு வழியாக, திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேவுள்ள ஒரு கிராமத்தில் இந்த ரைடு முடிவுற்றது. இங்கு கிரிக்கெட் போட்டி, ஸ்லோ ரேஸ் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.