தோரணமலை: சித்தர்கள் மற்றும் ஞானியர்களின் தபோவனத்தில் மகாஸ்கந்த ஹோமம் – நீங்களும் பங்கேற்கலாம்!
தென்னகம் எங்கும் ஆறுமுகனுக்கு ஆலயங்கள் ஆயிரம் உண்டு. அதில் முருகனின் அருள் வாசமும் சித்தர்களின் அரூப வாசமும் உணரக்கூடிய தலம் தோரணமலை. இங்கு பணிபவர் துயர் களைகிறான் கந்தன். மலையேறி வருபவர்க்கு க்ஷண நேரத்தில் அருள்மழை பொழிகிறான் குமரன். சித்தர்களின் நித்திய பூஜையில் மகிழும் சிவபாலன். இங்கு வந்து தொழுபவர்களின் குறையெலாம் தீர்த்து நிறைவாழ்வு பெறச் செய்கிறான். கந்தனுக்கு `நான் மீளா அடிமையாகி வாழவேண்டும்’ என்று தேரையர் உள்ளிட்ட பல சித்தர்களும் ஞானியரும் உலவும் மலையிது. முன்பதிவு…