மெட்டி ஒலி 2: மீண்டும் `அம்மி அம்மி அம்மி மிதித்து..!’ – 2 வது பாகத்தை இயக்கப் போவது இவர்தான்
சேட்டிலைட் சேனல்களின் வருகைக்குப் பிறகே, சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்கத் தொடங்கியதெனச் சொல்லலாம். சன் டிவியில் ஒளிபரப்பான தொடர்களில் அமோக ஆதரவைப் பெற்ற தொடர் என்றால் அது ‘சித்தி’தான். இந்த சீரியலுக்கு அடுத்தபடியாக அதிகமான மக்கள் ரசித்த தொடராக ‘மெட்டி ஒலி’யைச் சொல்லலாம். இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் சித்திக் தயாரித்த இந்தத் தொடர் சன் டிவியில் 800 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பானது. ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்ற அப்பா டெல்லிகுமார் அந்தப் பிள்ளைகளை எப்படி வளர்த்து ஆளாக்கித் திருமணம் செய்து தருகிறார், திருமணத்துக்குப் பிறகு அந்தப் பிள்ளைகள் தங்களது…