‘இங்கு மான்கறி கிடைக்கும்’ – உணவக மேலாளர் உள்பட 3 பேர் கைது
தேன்கனிக்கோட்டை அருகே மான்களை வேட்டையாடி சமைத்து விற்பனை செய்ததான உணவக மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குள்ளட்டி வனப் பகுதியை ஒட்டி தனியாருக்குச் சொந்தமான உணவகம் உள்ளது. இங்கு கேரளாவைச் சேர்ந்த பிரசாந்த் (43), என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், குடிசலூர் கிராமத்தைச் சேர்ந்த மல்லேசன் (32), மாதேஷ் (38) ஆகியோர் குள்ளட்டி வனப்பகுதியில் மான்களை வேட்டையாடி இந்த உணவகத்தில் சமைத்து விற்பனை செய்து வந்துள்ளனர்….