புதுக்கோட்டை சிங்கப்பெண்கள் கவிதா ராமு, வந்திதா சந்தித்த சவால்களும் சாதனைகளும்!
சில தினங்களுக்கு முன் புதுக்கோட்டையின் முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர், வேங்கவயல் பகுதியில் பட்டியலின மக்களுக்கான குடியிருப்பில் உள்ள குடிநீர் தொட்டியில் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மனித கழிவுகளை கலந்ததாக எழுந்த புகார் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த புகார் மீது விசாரிக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரான கவிதா ராமுவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரான வந்திதாவும் நேரில் சென்று ஆய்வு நடத்தியபோது, “தலைமுறை தலைமுறையாக அந்த கிராமத்தில் உள்ள ஐயனார் கோயிலுக்குள் எங்களை வழிபட…