ஜல்லிக்கட்டை பார்க்க வந்த சிறுவன் காளை முட்டி பலி! துயரத்திலும் பெற்றோரின் மனிதநேயம்!
தருமபுரியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை வேடிக்கை பார்க்க வந்த சிறுவளை காளை முட்டியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். பாதுகாப்பு அம்சங்களை முறையாக கடைபிடிக்கவில்லை என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். தருமபுரி அருகே இன்று மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 600 காளைகளும், 400 மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில், வெகு சிறப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண தருமபுரி மாவட்டம் முழுவதிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து கண்டு ரசித்தனர். இந்நிலையில், பாலக்கோடு…