`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் கனகசபை மீது ஏறி பக்தர்கள் நேற்று சாமி தரிசனம் செய்தனர். இதுதொடர்பாக நேற்று அரசாணை வெளியான நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்றே இந்த நடைமுறை அமல்படுத்தபட்டு, பக்தர்கள் தரிசனம் செய்தனர். இருப்பினும் இந்த நடைமுறைக்கு தீட்சிதர்கள் ஆட்சேபனை தெரிவித்ததுடன் சட்டப் போராட்டம் நடத்தபடும் என்றும் அறிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மூலவரான நடராஜருக்கு அருகில் உள்ள கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி கும்பிடுவது…