”உங்கள் வீட்டிற்குள் புதையல் இருக்கிறது”..சிக்கிய மந்திரவாதிகள்..வெளிவந்த பகீர் உண்மைகள்!
புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூரில் பெண்ணின் வீட்டில் புதையல் எடுப்பதாக ரூ. 75 ஆயிரம் மோசடி செய்த மந்திரவாதிகள் மூன்றுபேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் பேதிரியன் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் மனைவி முத்துலட்சுமி. இவர் கூலி வேலைப் பார்த்து வாழ்வை நகர்த்தி வருகிறார்.கடந்த ஆண்டு இவரது மூத்த மகன் சிவகுமார் உயிரிழந்த சம்பவமும் அதன்பின் அவரது குடும்பத்தில் தொடர் பிரச்சினைகள் ஏற்பட்டதாலும் முத்துலட்சுமி மன விரக்தியில் இருந்துள்ளார். இதனிடையே, கடந்த பிப்ரவரி…