திருமணமான 6 மாதத்தில் பெண் மருத்துவர் தற்கொலை; ஆர்.டி.ஓ தலைமையில் தீவிர விசாரணை
திருமணமான ஆறே மாதத்தில் பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேட்டுப்பாளையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் ஆர்.டி.ஓ விசாரணை நடந்துவருகின்றது. மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 30). இவர் கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி ராசி (வயது 27). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. இவர்களில் ராசி கடந்த 2020ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். மேற்கொண்டு முதுகலை…