டி20யில் குறைவான நேரத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா மோசமான பதிவு.!
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி முதல் 5 விக்கெட்டுகளை குறைவான நேரத்தில் விட்டுக்கொடுத்து மோசமான ரெக்கார்டை பதிவு செய்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்நிலையில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று புதன்கிழமை திருவனந்தபுரத்தில் இரவு 7 மணிக்குத் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். முதலில்…