ரிஷப் பண்ட் கார் விபத்து – பிசிசிஐ வெளியிட்ட முதற்கட்ட மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
ரிஷப் பண்ட் இன்று (டிசம்பர் 30) காலை உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த போது அவரது கார், சாலைத் தடுப்பின் மீது மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ரிஷப் பண்ட்டிற்கு ஏற்பட்ட காயம் மற்றும் அவரது விபத்து தொடர்பான தகவல்களை பிசிசிஐ அறிக்கையாக வெளியிட்டுள்ளது. ரிஷப் பண்ட் அதில், “இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட், இன்று (வெள்ளி) அதிகாலை உத்தரகாண்ட் மாநிலம்…
FIFA WorldCup 2022 Final: மெஸ்ஸியின் அதிரடியில் மூன்றாவது முறையாக சாம்பியனானது அர்ஜெண்டினா!
22வது ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி காத்தாரில் கடந்த நவம்பர் மாதம் 20-ம் தேதி தொடங்கிய கோலாகலமாக நடைப்பெற்று வந்தது. இதன் உச்சகட்டமாக பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி கத்தாரின் லுசைல் மைதானத்தில் இன்று இரவு நடைபெற்றது. கால்பந்து போட்டியின் ஜாம்பவனான மெஸ்சியின் கடைசிப்போட்டி இது. எனவே இப்போட்டி உலகமுழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்திருந்தது. பரபரப்பாகத் தொடங்கிய ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் டி மரியா சம்பாதித்துக் கொடுத்த…