1947 சுதந்திரத்திற்குப் பிறகு எந்த அரண்மனையும் கட்டப்படவில்லை. ஆனால் தற்போது முதன்முறையாக ஒரு அரண்மனை தொழில் அதிபரும் ஆதித்யராம் குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான திரு. ஆதித்யராம் அவர்களால் “ஆதித்யராம் அரண்மனை” சென்னை ECR-ல் கட்டப்பட்டுள்ளது. இந்த அரண்மனை திரு. ஆதித்யராம் அவர்களின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று, 1947-க்குப் பிறகு தென்னிந்தியாவில் கட்டப்பட்ட மிகப்பெரிய அரண்மனையாகும். ஆதித்யராம் அரண்மனை உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் ஆடம்பரமான வசதிகள் ஆகியவற்றின் கலவையாகும். இது சென்னையின் வளமான கட்டடக்கலை வரலாற்றின் வளர்ச்சிக்குச் சான்றாக விளங்குகிறது. மற்றுமொரு சிறப்பம்சமாக ஆதித்யராம் அரண்மனை தேசிய அளவில் ட்விட்டர் டாப் 3 ட்ரெண்டிங்கில் இடம்பெற்றிருப்பது சென்னையின் பெருமையாக உள்ளது. ஆதித்யராம் குழுமம் தென்னிந்தியாவின் ஒரு முன்னணி நிறுவனமாகும் இந்நிறுவனம் தனது வெற்றிக் கால் தடத்தை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மூன்று மாநிலங்களில் கொண்டுள்ளது. இக்குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமான திரு ஆதித்யராம் ஒரு முதல் தலைமுறை தொழில்முனைவோர் ஆவர். இவர் தனது முத்திரையை ரியல் எஸ்டேட், கார்ப்பரேட், மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் கால் பதித்து உச்சம் தொட்ட பில்லியனர். ஆதித்யராம் குழுமம் இவரது தலைமையில் ரியாலிட்டி மற்றும் பொழுதுபோக்குத் துறைகளில் அழிக்க முடியாத அடையாளத்தைப் பதித்துள்ளது. தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இவர், சென்னையின் அடையாளமாக ஆதித்யராம் அரண்மனையை உருவாக்கி இருக்கிறார். Adityaram இந்த அரண்மனை இத்தாலிய மார்பிள் மற்றும் தனித்துவமான ஓனிக்ஸ் மூலம் கட்டப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் செதுக்கப்பட்ட பலஸ்டர்கள், தூண்கள் மற்றும் சிலைகளை கொண்டு ஒவ்வொரு இடமும் உன்னிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அரண்மனையில் ஜாக்கிங் டிராக், நீச்சல் குளம், புத்தர் சிலை கொண்ட அக்வாரியம் மற்றும் பிரமிக்க வைக்கும் திரையரங்கமும் உள்ளது. இதனுடன் ஆடம்பரமான ஸ்பா, ஜிம், ஆகியவற்றையும் கொண்டுள்ளது. அரண்மனையில் வணிகக் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்கான பிரத்யேக போர்டு ரூம் மற்றும் சேர்மன் அலுவலகம் உள்ளது. மேலும், இதனுள் பொழுதுபோக்கு பில்லியர்ட்ஸ் விளையாட்டு அறை, தனி கோல்ஃப் கோர்ட் மற்றும் சொகுசு கார்கள் நிறுத்தி வைக்க 50 பிரத்தியேக இடங்கள் உள்ளது மற்றும் 80-க்கும் மேற்பட்ட வீட்டுப் பணியாளர்கள் தங்கும் அறைகளும் இதனுள் அடங்குவது குறிப்பிடத்தக்கது. Adityaram Palace திரு. ஆதித்யராம் அவர்கள் இதுபோன்ற பிரமாண்ட வாழ்க்கையை அனைவருக்கும் வழங்க ஆதித்யராம் அரண்மனை நகரம் என்கிற புது அரண்மனை வில்லாக்கள் திட்டத்தை இக்குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவின் கீழ் அறிமுகப்படுத்தியுள்ளார். இத்திட்டம் தென்னிந்தியாவின் முதல் அரண்மனை வடிவமைப்பிலான வில்லாக்களை சென்னை ECR-ல் வழங்குகிறது. இதன் காரணமாக “ஆதித்யராம் அரண்மனை” சென்னையின் பெருமையாக ட்விட்டர் தேசிய அளவில் டாப் 3 ட்ரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.