ஏற்றுமதி வரி அதிகரிப்பால் அதிருப்தி; அஜித் பவார் வாகனம்மீது தக்காளி, வெங்காயத்தை வீசிய விவசாயிகள்!
மகாராஷ்டிராவில்தான் நாட்டிலேயே அதிக அளவு வெங்காயம் விளைகிறது. மகாராஷ்டிராவில் இருந்து அதிக அளவில் வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த மாதம் வெங்காயத்தின் விலை உயர ஆரம்பித்தது. உடனே உள்நாட்டில் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான ஏற்றுமதி வரியை மத்திய அரசு கணிசமாக அதிகரித்தது. இதற்கு மகாராஷ்டிராவில் வெங்காய விவசாயிகளும், வியாபாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெங்காயம் அதிக அளவில் விளையக்கூடிய நாசிக் மாவட்ட காய்கறி மார்க்கெட்களில் வெங்காய ஏலத்தை நிறுத்தி விவசாயிகள்…