அதிமுக: உற்சாகத்தில் எடப்பாடி; பன்னீரின் `வாபஸ்’ முடிவு – அடுத்தக்கட்ட திட்டங்கள் என்னென்ன?!
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து இருக்கிறார். அதன்படி, எடப்பாடி தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தென்னரசு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்திருக்கிறது. இதன்காரணமாக, இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்குவதற்கான ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திட தமிழ்மகன் உசேனுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. தமிழ்மகன் உசேன் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் தனித்து செயல்படும்…