கடலூர்: நலத்திட்ட விழாவுக்கு தாமதமாக வந்த அமைச்சர்கள்; 4 மணி நேரம் காத்திருந்த மாற்றுத்திறனாளிகள்
கடலூரில் மாவட்ட அனைத்துத் துறைகள் சார்பில் `ஈடில்லா ஆட்சி… ஈராண்டே சாட்சி’ என்ற தமிழ்நாடு அரசின் இரண்டாம் ஆண்டு திட்டப் பணிகள் தொடர்பாக சாதனை மலர் வெளியீடு மற்றும் 807 பயனாளிகளுக்கு ரூபாய் 1.5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காலை நடைபெற்றது. அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் கலந்துகொண்ட இந்த விழா காலை 10:30 மணிக்குத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அத்தனை பயனாளிகளையும் 8:30 மணிக்கே அவர்களின் இருக்கைகளில்…