“பாஜக-விலிருந்து எங்களுடன் சேர வரிசையில் நிற்கிறார்கள்..!” – திரிணாமுல் எம்.பி அபிஷேக் பானர்ஜி
மேற்கு வங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன் சிங் பா.ஜ.க-விலிருந்து மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு மேற்கு வங்கத்தின் பாரக்பூரில் வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட திரிணாமுல் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி, “பா.ஜ.க-விலிருந்து எங்களுடன் சேர வரிசையில் நிற்கிறார்கள். அவர்களின் பட்டியல் வேண்டுமா? யாரெல்லாம் திரிணாமுல் காங்கிரஸை மேற்கு வங்கத்தைவிட்டு வெளியேற்ற நினைத்தார்களோ அவர்கள் தற்போது வங்காளத்தைவிட்டு வெளியேறிவிட்டனர். அபிஷேக் பானர்ஜி பல நாடாளுமன்ற உறுப்பினர்கள்…