“நடராசனை ஒதுக்கியே வைத்திருக்கிறேன்” ஜெயலலிதா சொன்ன தினம் இன்று! #OnThisDay
2001 சட்டசபைத் தேர்தல் நேரம் அது. தேர்தல் நேரங்களில் சசிகலாவின் கணவர் நடராசன் பற்றிய பேச்சுகள் கிளம்பும். அப்படித்தான் 2001 சட்டசபைத் தேர்தலின் போதும் நடராசனின் பெயர் அடிபட்டது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, சசிகலா, நடராசனின் கட்டுப்பாட்டில்தான் ஜெயலலிதா இருந்தார். ஒரு கட்டத்தில் போயஸ் கார்டனிலேயே சசிகலாவும் நடராசனும் குடியேறினார்கள். 1991 – 1996 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் எல்லை மீறிப் போனது. சசிகலாவின் சகோதரர் திவாகரன், அக்காள் மகன் தினகரன் ஆகியோர்…