நேத்ரா குமணன் : முதல் பெண்… முதல் பதக்கம்… தடைகளை தாண்டி படகோட்டும் தமிழக வீராங்கனை!
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு செல்லும் இந்திய அணிகளில் இந்த முறை பெண்களே அதிக கவனத்தை ஈர்த்திருக்கின்றனர். குறிப்பாக, தமிழக வீராங்கனைகள் சிலர் இப்போதே வரலாற்றில் தங்களுடைய பெயரை பதித்திருக்கிறார்கள். அதில், நேத்ரா குமணனும் ஒருவர். படகோட்டும் போட்டியில் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற்றிருக்கும் முதல் பெண் என்கிற வரலாற்று சாதனையை செய்திருக்கிறார். 23 வயதாகும் நேத்ரா குமணன் சென்னையை சேர்ந்தவர். கோடை விடுமுறைகளில் சிறுவர்களுக்கான பயிற்சி முகாம்களில் கலந்துக்கொண்டு பல திறமைகளை வளர்த்தெடுத்திருக்கிறார். நடனம், இசை என ஒவ்வொரு…