கார வடையும் உருளைக்கிழங்கு குல்கந்தும் | விருந்தோம்பல்
ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறைக்கு ஊருக்கு சென்றுவிட்டு பின் அங்கிருந்து அருகில் இருக்கும் ஊர்களுக்கு பிக்னிக் அல்லது ஒரு நாள் பயணமாக செல்வது வழக்கம். இப்படித்தான் ஒவ்வொரு கோடை விடுமுறையையும் பயனுள்ளதாகவும் சுவாரசியமாகவும் கழிப்போம். ஒருமுறை எங்கள் தாத்தாவின் சொந்த ஊரான நாங்குநேரிக்கு செல்லலாம் என்று பிளான் போட்டோம். அங்கு நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாதம் தங்கத் தேரோட்டமும், சித்திரை மாதம் பெரிய தேர்த்திருவிழாவும் பத்து நாள் திருவிழாவாக சிறப்பாக நடக்கும். பல…