“கொரோனாவை விட அதிக உயிரிழப்புகளை சூழல் மாசுபாடு ஏற்படுத்தும்” – எச்சரிக்கும் ஐ.நா அறிக்கை
பூச்சிக்கொல்லிகள், பிளாஸ்டிக் மற்றும் மின்னணுக் கழிவுகளால் ஏற்படும் மாசுபாடு காரணமாக வருடத்திற்கு குறைந்தது 90 லட்சம் மரணங்கள் ஏற்படுவதாகவும், இது கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட அதிகம் என ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட இந்த ஐ.நா சுற்றுச்சூழல் அறிக்கையில், சில நச்சு இரசாயனங்களை தடை செய்ய உடனடி மற்றும் தீவிர நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது. உலகெங்கும் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள், பிளாஸ்டிக் கழிவுகள், எலக்ட்ரானிக் கழிவுகளால் ஏற்படும் மாசுபாடுகள்…