நொய்டாவில் 9 விநாடிகளில் இடிக்கப்படும் இரட்டை கோபுர கட்டடம் – பின்னணி என்ன?
விதிகளை மீறி கட்டப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள இரட்டை கோபுர குடியிருப்பு கட்டடங்கள் வருகிற மே மாதம் மிகுந்த பாதுகாப்புகளுடன் இடிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான திட்டமிடல் தற்போது நடந்து வருகிறது. டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட சூப்பர்டெக் நிறுவனம், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் 31, 32 மாடிகளைக் கொண்ட இரண்டு பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களை கட்டியது. இரண்டு கட்டடங்களில் 633 குடியிருப்புகளுக்கு சூப்பர்டெக் நிறுவனம் முன்பணம் பெற்றுள்ளது. இந்நிலையில், வீட்டிற்கு முன்பணம் செலுத்தும் போது…