தூய்மை காற்று திட்டம்: தமிழ்நாட்டிற்கு ரூ.233 கோடி ஒதுக்கீடு
தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ 233 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி சென்னைக்கு ரூ 181 கோடி, மதுரைக்கு ரூ 31 கோடி மற்றும் திருச்சிராப்பள்ளிக்கு ரூ 21 கோடி என தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ 233 கோடி சென்ற நிதி ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடிக்கு 2021 மார்ச் 31 வரை ரூ 3.06 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு…