11 ஆண்டுகளுக்கு ஒருமுறை தீவிரமடையும் சூரிய கரும்புள்ளிகள் – சூரியகாந்த புயலுக்கு வாய்ப்பு
11 ஆண்டுகளுக்கு ஒருமுறை தீவிரமடையும் சூரிய கரும்புள்ளிகள் சூரியனில் ஏற்படத் துவங்கியுள்ளதாக கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பூமியின் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள, வான் இயற்பியல் ஆய்வகத்தின் பிரதான ஆய்வாக சூரியனை கண்காணிப்பது உள்ளது. சமீபத்தில் நாசா விஞ்ஞானிகள், சூரியகாந்த புயல் இந்த ஆண்டு அதிக அளவில் வீச வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் விண்வெளி சாட்டிலைட்டுகள் மற்றும் செல்போன் அலைவரிசைகள் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை…