வைக்கோல் படப்புக்குள் பதுங்கியிருந்த 3 நல்ல பாம்புகள் – லாவகமாக பிடித்த பாம்பு மீட்பர்
வைக்கோல் படப்புக்குள் பதுங்கியிருந்த 3 நல்ல பாம்புகள் பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டன. தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வைக்கோல் படப்புக்குள் நல்ல பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் பாம்புகளை மீட்பதில் கைதேர்ந்தவரான ஷேக் உசேன் பாம்பை மீட்க வரவழைக்கப்பட்டார். அவர் வைக்கோல் படப்புக்குள் பதுங்கியிருந்த பாம்பை தேடும்போது அங்கே மேலும் 2 பாம்புகள் என மொத்தம் 3 நல்ல பாம்புகள் இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து 3 நல்ல பாம்புகளையும் லாவகமாக பிடித்த…