உடலிலிருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் இறந்துகிடந்த யானை – தடாகம் அருகே அதிர்ச்சி!
கோவை மாவட்டம் தடாகம் வனப்பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று உயிரிழந்தது. கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யானைகள் அடுத்தடுத்து உயிரிழப்பது வன உயிரி ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை வனச்சரக அலுவலர்கள் தடாகம் வனப்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெருமாள்முடி மலை அடிவாரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காப்புக் காட்டிற்கு அருகேயுள்ள தனியார் நிலத்தில் யானை ஒன்று உயிரிழந்திருப்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன்பேரில்…