அதிகரித்து வரும் மின்னணுக் கழிவுகள் – இந்தியாவின் எதிர்காலம் என்ன?
செல்போன், டிவி, லேப்டாப், கணினி, ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஸ்மார்ட் வாட்ச் என மின்சாரத்தைக் கொண்டு பயன்படுத்தப்படும் அனைத்து மின்னணு சாதனங்களையும் குறிப்பிட்ட காலம்வரை மட்டும்தான் நாம் பயன்படுத்த முடியும். அதன் ஆயுட்காலம் முடிந்தபின், அதாவது அதனை நாம் பயன்படுத்துவதை நிறுத்தியபின் அவை அனைத்தும் மின்னணுக் கழிவுகளாக மாறிவிடும். மின்னணுக் கழிவுகள் பொதுவாக முறையாக மறுசுழற்சி செய்யப்பட வேண்டும். ஆனால், இந்தியாவில் அப்படியல்ல. மிகக்குறைந்த அளவிலான மின்னணுக் கழிவுகளே முறையாக மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இந்தியா மட்டுமன்றி, உலகளவிலும் இதுவே நிலைமை. உலகம் முழுவதும் வருடத்துக்கு சுமார் 5 கோடி டன்களுக்கும் அதிகமான…