ஓராண்டுக்கு பின்னர் மீண்டும் தொடங்கியுள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா!
மாசுபடாமல் எங்கும் கொட்டி கிடக்கும் இயற்கை வளம், காணுமிடமெல்லாம் பசுமை, கண்ணுக்கெட்டிய தூரம் வரை சுத்தமான தண்ணீர் என்பதெல்லாம் தற்போது வெகு அரிதாய் கிடைக்கும் பொக்கிஷங்களாக மாறிவிட்டன. மேற்குத்தொடர்ச்சி மலையில் இன்னும் இயற்கை சூழல் மாறாமல் தூய்மையான காற்று, அடர்ந்து வளர்ந்த மரங்கள், மலை முகடுகளில் வளைந்து நெளிந்து நளினமாய் ஓடும் பவானி ஆறு. இதில் தாகம் தீர்க்கும் வனவிலங்குகள், மண் மனம் மாறாத பழங்குடியின மக்கள் என முற்றிலும் இயற்கை அன்னையின் அரவணைப்பால் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட…