“எங்க கஷ்டங்களை முகமூடிக்குள்ளயே மறைச்சிப்போம்!” – பொம்மை வேஷக்காரர்களின் வேதனை
தீபாவளி என்றதும் புது ஆடைகள் வாங்குவது, ஊருக்குச் செல்வது போன்ற சில காட்சிகள் நம் மனத்திரையில் விரியும். இந்தத் தீபாவளிக்கு என்ன ஆடை வாங்கலாம் என்ற கனவுடன் சென்னை தியாகராய நகரில் நுழைந்தேன். மனிதர்களின் முகங்களில் அணிந்திருக்கும் மாஸ்கைத் தவிர தீபாவளி கொண்டா.ட்டங்களில் கொரோனா எந்த வகையிலும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதற்கு கூட்டமும் நெரிசலுமே சாட்சியங்கள். மிக்கி மவுஸ் தள்ளு முள்ளுக்குப் பிறகு, நான் வழக்கமாக ஆடை வாங்கும் கடைக்குள் நுழைந்தேன். ‘வணக்கம் என்ன வாங்கப்போறீங்க’? என்று எந்திரத்தைத் தோற்கடிக்கும் விதமாக எல்லாரிடமும் ஒரே கேள்வியைக் கேட்டுக்கொண்டிந்த…