`ஜூன் 1-ல் பத்தாம் வகுப்புத் தேர்வு… மாணவர்களின் மனநிலை எப்படியிருக்கும்?’ – உளவியல் நிபுணர்
கொரோனா, அதைத் தொடர்ந்த ஊரடங்கு காரணமாக ஏப்ரலில் நடக்க வேண்டிய பத்தாம் வகுப்பு தேர்வு, ஜூன் முதல் வாரத்தில் நடக்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஆசிரியர்கள் சிலர், தங்களுடைய முகநூலில் ‘ஆசிரியர்களுக்கு மட்டும்தான் மாணவர்களின் மனநிலை நன்கு தெரியும். மிக நீண்ட விடுமுறைக்கு அடுத்த நாளே தேர்வு வைத்தால் அவர்களுடைய மனம் அதில் பதியாது. ஏனென்றால், மாணவர்கள் தற்போது ஆசிரியர்களாகிய எங்களைவிட்டு மனதளவிலும் வெகு தூரத்தில் இருக்கிறார்கள். அவர்கள் எங்கள் பக்கத்திலேயே இருக்கும்போது…