மாயமான T 23 புலி; 17-வது நாளாக தொடரும் தேடுதல் வேட்டை! என்ன நடக்கிறது முதுமலையில்?
உடலில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக வேட்டைத் திறன் குறைந்த டி-23 என பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று 2 மாதங்களுக்கு முன்பு முதுமலை காட்டைவிட்டு வெளியேறி கூடலூர் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் தஞ்சம் புகுந்தது. கடந்த 2 மாதங்களில் 20-க்கும் அதிகமான கால்நடைகளை தாக்கிய அந்தப் புலி, கடந்த செப்டம்பர் 24-ம் தேதி தேவன் எஸ்டேட்டைச் சேர்ந்த சந்திரன் என்ற நபரை தாக்கிக் கொன்றது. புலியைப் பிடிக்க வலியுறுத்தி கூடலூர் மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்….