’குறிப்பிட்ட நேரம் தான் வீட்டுப்பாடம்..அதிக எடையுள்ள பைகளை சுமக்க கூடாது’- ம.பி கல்வி துறை
மத்திய பிரதேச மாநில பள்ளி கல்வித்துறை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு நிர்ணயித்துள்ள எடையுள்ள பள்ளிப் பைகளை மட்டும் தான் மாணவர்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை உறுதி செய்யவும், மாணவர்களுக்கு வழங்கப்படும் வீட்டுப்பாடங்களை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநில கல்வித்துறை அறிவித்துள்ள அறிவிப்பில், 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பள்ளிப் பைகளின் எடை குறித்த வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 1 மற்றும் 2 ஆம்…