ஜம்மு காஷ்மீர்: ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து.. 11 பேர் பலியான சோகம்!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பரேரி நல்லா அருகே உள்ள ஆழமான பள்ளத்தாக்கில், பேருந்து ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் , 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சம்பவம் நடந்த உடனேயே அருகிலிருந்த உள்ளூர்வாசிகள், காவல்துறை மற்றும் ராணுவத்தினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சாவ்ஜியானில் இருந்து மண்டிக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜம்மு காஷ்மீர் துணைநிலை…